சென்னை: தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ் தெரியாதவர்கள் இனி தமிழ்நாட்டில் அரசுப்பணியில் சேர்வதை தடுக்கும் வகையிலும், தமிழக இளைஞர்களுக்கு 100 சதவீதம் வேலை, போட்டித் தேர்வுகளில் தமிழ் பாடத்தாள் கட்டாயம் என்று அரசாணை வெளியிட்டுள்ள தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த அறிவிப்பின் மூலம் லட்சக்கணக்கான தமிழக இளைஞர்கள் பயன்பெற போகிறார்கள்.